Monday, April 14, 2008

அமெரிக்காவில் ஒரு தொல்காப்பியர்



அமெரிக்காவில் ஒரு -தொல்காப்பியர் ---


மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியர் அவர் காலத்தில் நிலவிய அனைத்துக் கலைகளையும் அறிந்திருந்தார் என்பதற்குத் தொல்காப்பியமே தக்க சான்றாக விளங்குகிறது.


உளவியல் பற்றி மெய்ப்பாட்டியலும் அகப் பொருள் குறித்த நூற்பாக்களும் சமூகவியல் பற்றிப் பொருள்அதிகாரம் முழுமையும் திறம்பட விளக்குகின்றன.தொல்காப்பியர் காலத்தில் கிளைமொழிகளாக விளங்கிய


ஏனைய திராவிடமொழிகள் பற்றியும் வடபுலத்தில் நிலவிய பிராக்கிருதம்,அபப்பிரம்சம் பற்றியும் தொல்காப்பியத்தில் குறிப்புகள் கிடைக்கின்றன.


இதுபோன்றே இன்றைய தொல்காப்பியர் எனக் குறிப்பிடத்தக்கவர் அமெரிக்காவில் வாழும் அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் ஆவார்.


ஒன்றல்ல;இரண்டல்ல;பதினெட்டு மொழிகளில் புலமை பெற்றவர் ஜார்ஜ் ஹார்ட்.


அமெரிக்காவில் தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் திகழும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சமற்கிருத மொழியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.எச்.டி.பட்டங்களைப் பெற்ற ஜார்ஜ் அதுபோன்றே தமிழ் மொழியிலும் பட்டங்களைப் பெற்றவர்.


அவரது ஆய்வுப்பட்டம் தமிழ-சமற்கிருதம் ஒப்பாய்வில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தது.


No comments: