Saturday, March 29, 2008

குருதிக் கொடை வள்ளல் பாற்கரன்

கடையேழு வள்ளல்களின் கொடைப் பண்பை இலக்கியங்களில் படித்திருக்கிறோம்.அவர்கள் தமது உடைமைகளைப் பிறர்க்குக் கொடையாக வழங்கினார்கள்.ஆனால் குருதிக்கொடைஞர்கள் தமது குருதியையே பிறர் நோயினின்றும் நீங்கி நலம் பெற வழங்குகிறார்கள்.இத்தகைய குருதிக் கொடைஞர்களில் முதலிட்ம் வகிப்பவர்,சென்னை வருமான வரி அலுவலகத்தில் பணியாற்றும் திரு.பாச்கரன் எனலாம்.
இதுவரை நூற்றுப்பதினான்கு முறை(114) குருதிக்கொடை வழங்கியுள்ளார்,பாச்கரன்.
1987 முதல் வருமான்வரித்துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் பாச்கரன்,பாரதி பாச்கரன் எனும் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
தமிழ் இலக்கியத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்ட இவர் பட்டிமன்றம்,கருத்தரங்கம் ஆகியவற்றில் சிறப்பாகப் பொழிவு ஆற்றுகிறார்.
29/11/1959 அன்று பிறந்த இவர் நாள்தோறும் புதிய முறைகளில் சமுதாயநலப் பணி ஆற்றிவருகிறாற்.
தமக்கு எத்தகைய விளம்பரமும் கூடாது என இவர் மறுத்துவிட்டார்.
இப்பெருந்தகை நோய்நொடியின்றி அனைத்துவளனும் பெற்று வல்லாங்கு வாழ்க என வாழ்த்துவோம்.

No comments: